பிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்

November 27, 2009


நண்பர் பீர் அவர்களின் அழைப்பை ஏற்று பலமுறை எழுதி ஏனோ பதிவிடாமல் இருந்து வந்திருக்கிறேன். இந்தப்பதிவை தொடங்கிய மாதவராஜ் “பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்” என்று எழுதி இருந்தார். எனக்கு பிடிக்காதவரை எழுதவதில் ஒரு பிரச்னையும்/மனத்தடையும் இல்லை. பல categoryகளில் பிடித்தவர் உடனடியாக மனதிற்கு தோன்றினாலும் பிடிக்காதவர் பிடிபட மறுக்கிறது. Anyways, முயற்சி செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பதிவர்

பிடித்தவர்தண்டோரா. பிரமாதமான எழுத்துநடை. நகைச்சுவையும் சூப்பர். (உன்னைப்போல் ஒருவன் பட விவாதத்தில் தேவையில்லாமல் வெட்டியாக கலந்துக்கொண்டபோது நான் கண்டெடுத்த பதிவர் !)

பிடிக்காதவர் – எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :) -

கவிஞர்

பிடித்தவர் – நான் கவிதைகளை பதிவுகளில் மட்டுமே படித்துள்ளேன். அவற்றுள் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதைகள் பிடிக்கும். (most of them)

பிடிக்காதவர் – முதல் ஒன்றிரண்டு வரிகளில் கவிதை புரிய கடினமாக இருந்தால் படிப்பதில்லை. ஆதலால் பிடிக்காத கவிதைகள்/கவிஞர்கள் என்று எதுவும்/யாரும் இல்லை.

எழுத்தாளர்

பிடித்தவர் – தி ஜானகிராமன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் – விமலா ரமணி, பாலகுமாரன், ராஜேந்திரகுமார்

விளையாட்டு வீரர்/வீராங்கனை

பிடித்தவர் – ஜன்ஷேர் கான் , கேரி கஸ்பரோவ், ஸ்டீபான் எட்பர்க், வீனஸ் வில்லியம்ஸ், மரடோனா, அஷ்ராவின், அசாருதீன், லாரா, வாசிம் அக்ரம், டைகர் வுட்ஸ் (விளையாட்டுக்கு மட்டும் நாடு / மாநிலம் ரூல்ஸ் ஒதுக்கப்படுகிறது)

பிடிக்காதவர் – நண்பர் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை எழுதி இருந்தார். அதுக்கு காரணமாக அவர் ஸ்பெயினில் வசிப்பதை சொல்லி இருந்தார். அவரை பின்னூட்டத்தில் பிடிக்காததற்கு “இது எல்லாம் ஒரு காரணமா” என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவர் பிடிக்காத விளையாட்டு வீரர் எழுதுவது சுலபமில்லை. யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் “டேய், அவன் காலை உடைங்கடா” என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.

நடிகர் / நடிகை

பிடித்தவர் – கமல், சிம்ரன், சிவாஜி

பிடிக்காதவர் – நமீதா !

இசை அமைப்பாளர்

பிடித்தவர் – முன்பு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். இப்போழுதென்னவோ சற்றுப் பழையப் பாடல்கள் பிடிக்கின்றன.

இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன் :) -

திருடுதல்

November 23, 2009
சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?
கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?
ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?
நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.
மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?
சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?
எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?
இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?
இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?
இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?
அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?
நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?
கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?
எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் – நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?
அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?
அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.
ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.
ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.

கிச்சடி – 19/11/09

November 18, 2009
ஐரோப்பா பிரெசிடென்சி ரேஸ்ல டோனி ப்ளேர் காலி. ரைட் டு சென்டர் தலைவர் தான் யாராவது வருவாங்க. யாருன்னு பார்க்கலாம்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுல பிரான்ஸ் ஜெயிச்சாங்க. பட், ஹென்றி கையால பந்தை தள்ளிவிட்டு அதுல gallas கோல் அடிச்சார். அதை காரணமா வச்சி ரீமேட்ச் வைக்கச்சொல்லி ireland football association கேட்டு இருக்காங்க. EU Brussels summit ல ireland பிரதமமந்திரி பிரெஞ்சு ப்ரெசிடென்ட் கிட்ட பேசப்போறாராம். Even if FIFA agrees, it can’t be a good justice to ireland as french would defintiely start as favourites again. These sort of injustice in sporting contests should remain as it is.

உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ?

ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல.

நண்பர் பீர் பிடித்தவர் / பிடிக்காதவர் தொடர் எழுதச்சொல்லி கூப்பிட்டார். ரெண்டு மூணு முறை எழுதிட்டேன். ஆனா சுவாரசியமாவே இல்லை. யாரெல்லாம் என்னோட பிடித்தவங்க லிஸ்ட்ல வரணும், யாரெல்லாம் வரக்கூடாதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. வாழ்க்கையிலே நாமே எதைத்தான் முடிவு பண்ணி இருக்கோம் ? இதை மட்டும் முடிவு பண்ண ?

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வரும் ஒரு ஜட்ஜ் சுபா. அவங்க பிரமாதமா contestant கூட empathize பண்றாங்க. ரொம்ப நல்ல குவாலிட்டி.

தமிழ்ல virtual keyboard பார்த்துக்கிட்டே டைப் பண்ணுவது மாதிரி ஏதாவது மென்பொருள் இருக்கா ? Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.

வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?

ஒரு அருமையான சமூகப்புரட்சி சிறுகதையை மீள்பதிவா போட்டா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலை. ஏன் இப்படி ?

கீழே நவம்பர் 24,2007 ல கவுஹாத்தில ஆதிவாசிகள் தங்களுக்கு ST அந்தஸ்து தரச்சொல்லி நடத்திய போராட்டதின் போது நடந்த வன்முறை வீடியோ. அடுத்தவாரம் ஊடகத்துல இந்த சம்பவம் குறித்தான நினைவூட்டல்கள் இருக்குமா ? இல்லாட்டி அன்றுடன் சச்சின் கிரிக்கெட் விளையாட வந்து 20 வருஷம் 9 நாள் ஆனது குறித்து ஏதாவது கலந்துரையாடல் இருக்குமா ?


வீடியோவில் வந்த பெண்ணின் பெயர் லக்ஷ்மி ஓராங் சுஷந்தா தாலுக்தார் . அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்றார். அவரால் ஏன் வெற்றிப்பெற முடியவில்லை ?

சிறுகதை – கல்யாணம்

November 6, 2009

டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.

கொஞ்சம் அடக்கி வாசிடா! கிராமத்துல யாராவது கேட்டுட்டு தப்பா நினைச்சிக்க போறாங்க என்று நண்பனை அடக்கியவாரே நடந்தான் தாயின் விருப்பத்திற்காக கல்யாணத்தில் நாட்டம் கொண்ட ரவி. பெண் வீட்டில் ஒரு படையே கூடி இருந்தனர். பெண்ணின் தந்தை பிள்ளை வீட்டினரை வரவேற்று உட்கார வைத்தார். வழக்கம் போல், போண்டா மற்றும் காபி கொண்டு வந்தாள் செம்பருத்தி.
பெரியவர்கள் செம்பருத்தியையும் ரவியையும் தனியே பேசுமாறு விளித்தனர். பம்பரம் போன்று சுழன்று செம்பருத்தியின் கூட பிறந்தவர்கள் அனைவரையும் கவனித்தனர். தோட்டத்தில் செம்பருத்தி ரவியிடம் அவளது காதலனை பற்றியும், குடும்பப்பகை பற்றியும் கூறி, தன்னை தயவு செய்து நிராகரிக்குமாறு கெஞ்சினாள். திரும்பி வந்த ரவி தனது பிடித்தத்தை தெரிவிக்க பெண் வீட்டினர் திடுக்கிட்டனர். பெண்ணின் பாட்டி தனது மகனிடம் சென்று “இது எல்லாம் இப்போ சகஜமா நடக்கிறது தான். உன்னோட பசங்க, பையன் முன்னாடி வந்து நிக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது. சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிடு ” என்று கூற ரவியின் திருமணம் செம்பருத்தியின் தம்பி சங்கருடன் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் இனிதே நடந்தேறியது !

( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )

சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்

November 6, 2009

ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை – 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்

http://blog.mohandoss.com/2009/05/3.html

கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

என்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.

0) சச்சின் – 175. அடுத்தபட்சம் அதிகமாக ரன் எடுத்தது சுரேஷ் ராயினா. அவர் எடுத்த ஓட்டங்கள் – 59. சச்சின் ஆட்டம் இழந்தபோது இந்தியா 17 பந்துகளில் 19 ரன் எடுக்கவேண்டிய நிலை. அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இந்தியாவின் இலக்கு 351. இந்தியா 49.4 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

1) சச்சின் – 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.

2) சச்சின் – 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.

3) சச்சின் – 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

4) சச்சின் – 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் !

5) சச்சின் – 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.

6) சச்சின் – 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

7) சச்சின் – 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.

8) சச்சின் – 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.

9) சச்சின் – 101. சவுரவ் – 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

10) சச்சின் – 100. இர்பான் பதான் – 65. டோனி – 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.

11) சச்சின் – 100. இந்திய அணி – 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.

சச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.

மிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும் 4) பார்க்கவும்.

கிச்சடி – 04/11/09

November 4, 2009
உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings – பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?
சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.
வலையில் சும்மா மேய்ந்தபொழுது “மூணார்” என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது “தேவேந்திரன்”. இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?
புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?
ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய “தி லாஸ்ட் வேர்ல்ட்” படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் – திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)
பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.
முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் “இலக்கிய இதழ்” தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.
வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.
கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்
இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?
ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.
நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?
writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல “நானே” என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?
ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது “நாகரீகம்” என்பதற்கு சரியான தமிழ் சொல் “சால்பு” என்று கூறினர். சரியா ?

கடைசியில் ஒரு திருப்பம் (சர்வேசன் 500 நச்ன்னு ஒரு கதை 2009 போட்டிக்காக)

October 26, 2009
ஒரு பத்திரிகைக்கு நாளை மறுநாள் கதை அனுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளேன். ஏனோ எழுதிவைத்த கதைகளை அனுப்ப மனம் இடம்கொடுக்கவில்லை.
– இந்த பத்திரிகை வாசகர்களுக்கு தகுந்த மாதிரியான சிறுகதைகள் அவற்றுள் இல்லை.
– என்னிடம் இருக்கும் கதைகளை இந்த பத்திரிகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை. அதைத்தவிர, இது போட்டிக்கான சிறுகதை. இப்போட்டியின் விதிமுறைப்படி கடைசியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.
– பலராலும் அறியப்பட்ட நான் போட்டியில் கலந்து கொள்வது குறித்து எனது முதன்மை வாசகியான பத்மா வருத்தம் தெரிவித்தாள்.இதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
– போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.
– முடிவும் நான் அறிந்ததே.
– எழுத்தையே தொழிலாக கொண்ட எனக்கு இதுவரை கதைக்கருவுக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் இன்று ஏனோ வறட்சி. கடந்த ஆறு வருடங்களாக எழுதாதது கூட காரணமாக இருக்கலாம்.
– கதை எழுத எப்பொழுது முயன்றாலும் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வது எனக்கு வழக்கம்.
இன்றும் நடக்கத் தொடங்கினேன். பழைய கதைகளுக்கு வந்த விமர்சனத்தை அசை போட்ட படியே நடந்தேன். நான் எழுதிய கதைகள் பலதும் வேறு யாரிடமிருந்தாவது எடுத்தாளப்பட்டதே ! ஆதலால் விமர்சனங்கள் என்னை பாதித்ததே இல்லை. அத்திபூத்தாற் நானே சொந்தமாக எழுதும் கதைகளை பிரசுரத்துக்கு அனுப்புவதே இல்லை. எந்த பத்திரிகையும் பதிப்பகமும் அதற்குரிய தகுதியை அடையவில்லை என்பதே எனது வாசகிகளின் கருத்து. நடந்ததில் பத்மாவின் வீட்டருகே வந்துவிட்டேன். ஜன்னல் வழியாக மிதுன் என்னைப் பார்த்து முறைத்தான். சிறு புன்முறுவலோடு அவனைக் கடந்தேன். பத்மாவை மணம் புரிவதற்கு முன்பு அவனுடன் நான் சிறிது காலம் நட்பாக பழகியுள்ளேன். அதன்பிறகு ஏனோ ஒரு இடைவெளி. இன்னும் சிறிது தூரத்தில் ரமேஷ். அவனையும் கடந்தால் சிறிது இடைவெளிவிட்டு முனைவீட்டில் பிரவீன். நடையின் வேகத்தை சற்றே தளர்த்தினேன். நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.
ம்ம்ம் நினைவை கலைத்துக் கொண்டே நடந்தேன்.
– சிறுகதை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கான நிகழ்வை அழகாக கூறுவது என்று பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன்.
இன்று ஏனோ ஒரு குறுநாவலுக்கான கருவே மனதில் தோன்றுகிறது. நாளை தொலைபேசியில் கதை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட வேண்டியது தான். அதுதான் நியாயமும் கூட. இல்லையென்றால் திருப்பம் கொடுப்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லாத கதையில் முடிவு எழுதுவதே கடினம். அதிலும் ஒரு திருப்பம் வேறு என்றால் படிப்பவருக்கு எரிச்சலே மேலிடும். எனக்கென்ன காசா பணமா ? நான் கதையை திருப்பிப் படிக்கக் கூட வேண்டியதில்லை. படித்தாலும் சிரிப்பு தான் வரும். பத்திரிகை ஆசிரியர் மற்றும் வாசகனின் தலையெழுத்தை நினைத்து. நொந்தபடியே தெருவின் எல்லைக்கு வந்திருந்தேன்.
இனி திரும்ப வேண்டும். வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது.

மிருதுளாவின் நாட்குறிப்புக்கள் – சிறுகதை

October 19, 2009
ரமேஷ் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 29 வருடம் – 3 மாதம் – 17 நாட்கள் ஆகின்றன. பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட். தனிவாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருபவன். அவனுக்கு திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவனது மனைவியின் சொத்து மதிப்பு இந்த க்ஷணத்தில் மதிப்பிட்டால் 63 கோடிக்கும் மேல். அழகானவள். ரமேஷிடம் ஆத்மார்த்தமான அன்பு கொண்டவள். செஸ் விளையாட்டில் GM பட்டம் பெற தகுதி பெற்றவள். அவளது பெயர் மிருதுளா.
அவனின் வாழ்க்கைக்குறிப்பை மேலும் எப்படி தொடர்வது என்று எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
“தனது கையில் இருந்த பந்தை விட்டெறிந்து 42′ இன்ச் Plasma தொலைக்காட்சியை எப்பொழுது உடைக்கிறானோ அதனுடன் நிறுத்திக்கொள்ளேன்” என்று மிருதுளா கூறியதாக ரமேஷ் என்னிடம் சொன்னான். அப்படிச் செய்தால் அவன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தியது எழுதப்படாமலே போய்விடுமே. அதனால்.
ரமேஷ் தனது 23வது வயதில் சுவீடனில் வசித்து வந்தபோது ஒரு ski ரெசார்ட்டில் மிருதுளாவை சந்தித்தான். இருவருக்கும் மலையேற்றம் ஒரு விருப்பமான விளையாட்டு என்பது புரிந்தது. 2001 – 2003 வரை சிலி மற்றும் டான்சானியாவில் உள்ள பல மலைக்குன்றுகளை ஒன்றாக hike செய்தனர். ஆனால் ஏனோ அதன்பிறகு இன்றுவரை வேறு எந்த hiking செய்யவும் இல்லை / அனுபவத்தைப் பற்றி பேசுவதுமில்லை. ஒரேயொருமுறை மிருதுளாவின் தோழி நன்றாக குடித்திருந்த சமயத்தில் அவளிடம் கிளிமஞ்சாரோவை ஏறியவுடன் வெறுமையாக உணர்ந்ததாக ரமேஷ் கூறியுள்ளான். காரணம் தெரியவில்லை. ரமேஷிற்கு.
சுலக்ஷ்னாவை கத்தியால் குத்த என்ன காரணம் இருக்கமுடியும் ? அவளைப் பற்றி ரமேஷிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் “வெதுவெதுப்பானவள்” என்று கூறுவான். அதன் அர்த்தம் என்னைப்போலவே பலருக்கும் புரியாததால் அவளின் குணங்களை விரிவாக ஆராய வேண்டும். பிறகொரு சமயத்தில்.
மிருதுளா/ரமேஷ் இருவரும் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வந்தனர். பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே. மனஅமைதி தேவைப்பட்டால் தோழன் தோழி மற்றும் நைட் கிளப். உடல் அசதியை போக்க Sauna மற்றும் Massage. மிருதுளாவும் ரமேஷிற்கு massage செய்வது உண்டு. அவளுக்கு Acu-Puncture கூட தெரியும் என்று ரமேஷ் பெருமைபட்டுப்கொள்வான். அந்தரங்கமான எந்த விஷயத்தையும் அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை. ஒருசமயம் அவர்களுக்கு ஒரு ஆன்மீக குருவின் அறிமுகம் கிடைத்தது. ஆன்மாவை சொஸ்தப்படுத்த அவரின் வழிமுறைகளை நாடினார்கள். மசாஜ் செய்யப்படும்போது massaeurயின் கைகள் வலிக்குமோ என்று ரமேஷிற்கு தோன்ற ஆரம்பித்தது அவரின் அறிமுகத்துக்கு பிறகு தான். மசாஜ் மற்றும் ஆன்மிகம் – இரண்டையும் விட்டு விலகி வந்தான்.
சுலக்ஷனாவின் மூக்கு மற்றும் புருவம் மிகவும் நேர்த்தியானது.அவள் மிருதுளாவிற்கு வியன்னாவில் அறிமுகமானாள். ஆஸ்திரிய பெண்களும், சிறுவயதில் பார்த்த ஸ்ரீரங்கத்து பெண்களும் ஒரே இனமாக இருக்கவேண்டும் என்று மிருதுளா கூறுவதாக ரமேஷ் என்னிடம் பலமுறை கூறியுள்ளான். அவனுக்கு சுலக்ஷனா செய்யும் Schnitzel மிகவும் பிடிக்கும். அதற்கெனவே அவளிடம் அடிக்கடி செல்வான். மிருதுளாவிற்குப் பிடிக்காது.
சில வருடங்களுக்கு முன்பு ரமேஷ் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணிநேரங்கள் பணிபுரிவான். ஹைபர் ஆக்டிவ்வாக இருப்பான். அதற்கென neuro enhancement drug உபயோகித்ததாக கூறுவான். அதனால் எந்த கெடுதலும் இல்லை என்பது அவனுக்கு அப்பொழுதே தெரியும். அடராள் / ப்ரொவிஜில் பயன்படுத்தினான் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு மில்லிகிராம் என்று என்னிடம் சொன்னதில்லை. எதேச்சையாக ஒருமுறை தொலைக்காட்சி ரிமோட்டை நோண்டியபோது மைஜென்டிவி என்ற ஒரு சேனல் அறிமுகம் ஆனதாம். அதில் வந்த யோகாவால் கவரப்பட்டு தனது காது மற்றும் மூக்கை விரல்களால் சுழட்டி பார்த்தான். முதல் பதினைந்து நிமிடத்திற்கு மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்ததாம். பிறகு தான் நான் முன்பு கூறியதுபோல் பக்கத்தில் இருந்த பந்தை விட்டெறிந்து தொலைக்காட்சியை உடைத்தான். இத்துடன் இந்தக்குறிப்பை முடித்துக் கொள்ளவேண்டியது தான். ஏனென்றால்.
இப்பொழுதும் அவன் ஏன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தினான் என்பதை எழுத முடியவில்லை. கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தவிர.
ரமேஷ், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அதற்கான காரணங்களையும் விலாவாரியாக நாட்குறிப்பில் எழுதவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவான். படிப்பவர்களின் அனுமானத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் கடுமையாக இருந்தான். நானும் அப்படியே எழுதியுள்ளேன்.
மிருதுளா, சுலக்ஷனாவிடம் இருந்த தனது தொடர்பை துண்டிக்கமுடியாமல் ரமேஷின் உதவியை நாடினாள் என்றே சந்தேகிக்கிறேன். வேறு எந்த அனுமானமும் நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். அதைத்தவிர அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டம் இல்லை.
இப்படிக்கு இனியாள்.
பின்குறிப்பு – எனக்கு மிருதுளாவை அதிகம் தெரியாததால் மிருதுளாவின் நாட்குறிப்புக்களை எழுதமுடியவில்லை. தெரிந்தவர்கள் எழுதலாம்
முற்றும்).

கிச்சடி – 16 அக்டோபர்

October 16, 2009

போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே – நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.

இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.

சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
“இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.

அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். “அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ” – அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.

World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?

WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் “//” சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !

எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.

எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :) – எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் “புனிதப்போர்” வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.

விதி வலியது

October 5, 2009
1.A – available/single? Not available & not single – Not single / Available என்ற ஆப்ஷன் இல்லாததால் வெளிநடப்பு.
2 B-.Best friend – எனது அனைத்து நண்பர்களும்.
3.C- Cake or Pie- லூசுக் கேள்வி.
4.D – Drink of Choice – ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட். போன கேள்வியோட பாதிப்பு.
5.E- Essential item you Use every day – டூத் பிக்.
6.F-favorate color – ப்ளூ
7.G-gummy bears or worms – or
8.Home Town – திருச்சி
9.I-Indulgence – தூக்கம்.
10.J- january/february – ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.
11.K-Kids and their Names – பையனின் பெயர் அபயன்-abyan/ஹயக். ஒரே பையன் தான். பிறந்து ஒரு மாதம் ஆகிறது.
12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13.Marriage Date – வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.
14.N – Number of sibilings – ஒரே ஒரு அக்கா.
15.O-Orange or Apples – ஆரஞ்சு
16.P- Phobias/fears – கேள்விகள், கேள்விகள், கேள்விகள்
17.Q-Quote for today – All generalizations are wrong including this one.
18.R-Reason to Smile – எனது குட்டிப்பையனின் அனைத்துச் செயல்களும்
19.S-Season – முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் சீசன் உண்டு. இப்பொழுது வருடம் முழுதும் களை கட்டுகிறது.
20.T-Tag4 People – நான் ஆதவன், தென்னம்மை லக்ஷ்மணன், அறிவிலி, கயல்விழி நடனம்
21.U-Unknown fact about me – முந்தைய ஜென்மத்தில் எனது பெயர் pglakti zsditum
22.V-Vegetable you won’t Like – பரங்கிக்காய்.
23.W-worst Habit – நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.
24.X- Xrays you had – தவறு செய்து விட்டு கண்ணாடியை பார்த்தால் கண் கூசும் என்கிறார்களே. அதுபோன்ற தத்துவார்த்தமான பதில் சொல்லவேண்டுமா ?
25.Y-Your favorate Food – அராபியாட்டா ரசம். நான் கண்டுபிடிச்சதாக்கும்.
26.Z-Zodiac sign – மீனம்
அன்புக்குரியவர்கள் – என் சொல்பேச்சு கேட்கும் அனைவரும்.
ஆசைக்குரியவர் – கேள்வி singular ஆக இருப்பதால் வெளிநடப்பு.
இலவசமாய் கிடைப்பது – சம்பளம்..
ஈதலில் சிறந்தது – ஈஈஈஈ. புன்னகை.
உலகத்தில் பயப்படுவது – இதுக்கு நான் பதில் வேற எழுதனுமா ?
ஊமை கண்ட கனவு –
எப்போதும் உடன் இருப்பது – அஃறினை கேள்விக்கு காரணம் என்ன ?
ஏன் இந்த பதிவு – நாளைய சரித்திரம்.
ராதாகிருஷ்ணன் சினிமா தொடர் அழைப்பை ஏற்று தான் இந்த வலைப்பதிவே தொடங்கினேன். அதுவரை பின்னூட்டம் மட்டுமே எழுதி மகிழ்ச்சியாக இருந்தேன். இப்பொழுது மறுபடியும் அவரின் அழைப்பை ஏற்று. (எனது அம்பதாவது பதிவா வந்து இருக்கணும். கவிதை ஆசையில விட்டுப்போச்சு..)
ஐஸ்வர்யத்தில் சிறந்தது – ஆரஞ்ச் வண்ண பவள மாணிக்க கல்.
ஒரு ரகசியம் –
ஓசையில் பிடித்தது – ரகசியம் கேட்டதா ?
ஔவை மொழி ஒன்று –

Follow

Get every new post delivered to your Inbox.