டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.
கொஞ்சம் அடக்கி வாசிடா! கிராமத்துல யாராவது கேட்டுட்டு தப்பா நினைச்சிக்க போறாங்க என்று நண்பனை அடக்கியவாரே நடந்தான் தாயின் விருப்பத்திற்காக கல்யாணத்தில் நாட்டம் கொண்ட ரவி. பெண் வீட்டில் ஒரு படையே கூடி இருந்தனர். பெண்ணின் தந்தை பிள்ளை வீட்டினரை வரவேற்று உட்கார வைத்தார். வழக்கம் போல், போண்டா மற்றும் காபி கொண்டு வந்தாள் செம்பருத்தி.
பெரியவர்கள் செம்பருத்தியையும் ரவியையும் தனியே பேசுமாறு விளித்தனர். பம்பரம் போன்று சுழன்று செம்பருத்தியின் கூட பிறந்தவர்கள் அனைவரையும் கவனித்தனர். தோட்டத்தில் செம்பருத்தி ரவியிடம் அவளது காதலனை பற்றியும், குடும்பப்பகை பற்றியும் கூறி, தன்னை தயவு செய்து நிராகரிக்குமாறு கெஞ்சினாள். திரும்பி வந்த ரவி தனது பிடித்தத்தை தெரிவிக்க பெண் வீட்டினர் திடுக்கிட்டனர். பெண்ணின் பாட்டி தனது மகனிடம் சென்று “இது எல்லாம் இப்போ சகஜமா நடக்கிறது தான். உன்னோட பசங்க, பையன் முன்னாடி வந்து நிக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது. சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிடு ” என்று கூற ரவியின் திருமணம் செம்பருத்தியின் தம்பி சங்கருடன் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் இனிதே நடந்தேறியது !
( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )
Advertisement
November 24, 2009 at 10:42 am |
மேலாக படிச்சா ஒன்ணுமே புரியாது – கடசில வர முடிவு திரும்பத் திரும்ப படிக்கணும் – அப்பத்தான் புரியும் – படிச்சென் – புரிஞ்சுது நல்வாழ்த்துகள் மணி